ஆப்நகரம்

கள்ளக்காதலால் மனைவி கொலை.! கணவனுக்கு ஆயுள்தண்டனை அளித்த சென்னை உ.நீ.மன்றம்..

தகாத உறவைத் தட்டிக்கேட்ட மனைவியைக் கொலை செய்த தீ அணைப்பு படை வீரருக்கு 4 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள்தண்டனையையும் 5 ஆயிரம் அபராதத்தையும் விதித்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2019, 6:05 pm
சென்னை கொண்டித்தோப்பு தீ அணைப்பு படை வீரர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் செந்தில்குமார் (33) இவரது மனைவி சரண்யா (25) இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செந்தில்குமார் தனது மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
Samayam Tamil fdhd


சரண்யாவின் உறவினர் இதுகுறித்து ஏழு கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அதன் பிறகு போலீசாரிடம் சிக்கிய செந்தில்குமாரை விசாரித்ததில் இவருக்கும் முத்துலட்சுமி என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்துள்ளது.

சரண்யா கொலை செய்யப்பட்ட நாளன்று கணவன் மனைவி இருவருக்கும் இதுகுறித்து வாக்குவாதம் நடந்துள்ளது. கள்ளக்காதலுக்கு சரண்யா தடையாக இருப்பதால் கட்டின மனைவி என்றும் கூட பாராமல் ஆத்திரமடைந்த செந்தில்குமார் சரண்யாவைக் கொலை செய்துவிட்டு தனது மகளுடன் தலைமறைவாகியிருக்கிறார்.

இந்த குற்றத்தின் அடிப்படையில் போலீசார் செந்தில்குமாரைக் கைது செய்து டிசம்பர் மாதம் அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தின் வளாகத்தில் உள்ள மகிளா குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்றோடு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி செந்தில்குமாருக்கு ஆயுள்தண்டனையையும் அறிவித்து 5 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளியைத் தேடிப் பிடித்து சாட்சிகளையும், ஆதாரங்களையும் தகுந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைத்து குற்றவாளி தண்டை பெற உதவிய ஏழு கிணறு காவல் ஆய்வாளரைப் பலரும் பாராட்டினர்.

அடுத்த செய்தி