ஆப்நகரம்

மதுரையில் இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட்..!

மதுரை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Samayam Tamil 30 Nov 2021, 5:59 pm
மதுரையில் இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த காவலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Samayam Tamil woman rape madurai


மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் தனது கடையில் பணிபுரியும் பெண் ஊழியருடன் கடந்த சனிக்கிழமை இரவு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்.

திரைப்படம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது நேதாஜி சாலை அருகே இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் முருகன் என்பவர் இருவரையும் நிறுத்தி விசாரணை செய்த பின் மகேஷ்குமார் தனியாக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதோடு, சந்தேகமாக இருப்பதால் அவருடன் வந்த இளம்பெண்ணை தானே வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துவருவதாக கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்

மேலும், சுரேஷ்குமாரின் செல்போன் மற்றும் பர்சை பறிமுதல் செய்துகொண்டதோடு அவருடைய ஏடிஎம் பின் நம்பரையும் கேட்டு வாங்கியுள்ளார்.

இதனையடுத்து இளம்பெண்ணை தனது வாகனத்தில் அழைத்துசென்று விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என கூறி விடுதியில் வைத்து அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மகேஷ்குமாரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளார்.

தமிழகத்தில் கஸ்டடி மரணங்கள் குறைவு: டாப் மாநிலம் எது? மக்களவையில் அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று காலை காவலர் முருகன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். .

இதனையடுத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து பணத்தையும் திருடிய காவலர் முருகனை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் கடை உரிமையாளரான மகேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் முருகன் மீது மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 5பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் காவலர் முருகனை மதுரை கமிஷனர் சிம்ஹா சஸ்பெண்ட் செய்ய உத்தவிட்டார். அதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி