ஆப்நகரம்

அமைச்சருக்கு கொலை மிரட்டல்? மதுரை கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நவல்பட்டு விஜி தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

Samayam Tamil 20 Jan 2022, 2:38 pm
அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சமூக ஊடகம் வாயிலாக கலை மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கு: ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
Samayam Tamil கோப்புப்படம்


திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த நாவல்பட்டு விஜி (எ) விஜயகுமார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி திருவெறும்பூர் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். உள்கட்சி பூசல் முன்விரோதம் காரணமாக, அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாக பேசி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டதாக என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து அவதூறாக பேசியதாகவும், திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் என் மீது வழக்கு பதிவு செய்தனர். என் மீதான முன் விரோதம் காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

தமிழகத்தில் யூடியூப் க்கு தடை..? ஷாக்கில் யூடியூபர்ஸ்... கடுப்பான உயர்நீதிமன்ற நீதிபதி..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அடுத்த செய்தி