ஆப்நகரம்

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு

விருதுநகரை சேர்ந்த பெண்ணுக்கு கவனக்குறைவாக எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 7:41 pm
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் 8 மாத கர்ப்பிணிக்கு தவறுதலாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. அப்போதைய விசாரணையில், விவகாசியை சேர்ந்த 18 வயதான வாலிபர் ஒருவர் ரத்த முகாமில் ரத்த தானம் செய்ததாகவும், அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பதைக்கூட கவனிக்காமல் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மருத்துவ நிர்வாகம் அந்த ரத்தத்தை செலுத்தியதும் தெரிய வந்தது.
Samayam Tamil file pic


அது மட்டுமின்றி, ரத்த தானம் செய்த வாலிபருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் ரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் அவருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த வாலிபர் சிவகாசி ரத்த முகாமிற்கு வந்து தனக்கு எச்.ஐ.வி இருப்பதாகவும், தன்னுடைய ரத்தத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும், பணியாளர்களின் அலட்சியத்தால் அந்த ரத்தம் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த விவாரம் பூதாகரமாக வெடிக்க, அது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.

அபயா வழக்கு: கன்னியாஸ்திரியின் உல்லாசம், திருடனின் சாட்சி, 28 வருடம் கழித்து தீர்ப்பு!

பின்னர் கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய விவகாரத்தில் தொடர்புடைய சிவகாசி ரத்த தானம் முகாம் பணியாளர்கள், லேப் டெக்னீசியன் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள மாதம் தோறும் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி