ஆப்நகரம்

தமிழகத்தில் யூடியூப் க்கு தடை..? ஷாக்கில் யூடியூபர்ஸ்... கடுப்பான உயர்நீதிமன்ற நீதிபதி..!

தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 20 Jan 2022, 2:09 pm
யூடியூபில் முன்னாள் முதல்வர், முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
Samayam Tamil யூடியூப் தடை செய்தி

விசாரணை செய்து, இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்து அவரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் மீண்டும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வருவதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி முன்வைத்த கேள்விகளாவன,

* சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடியூபில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

* வங்கிக் கொள்ளை போன்ற விபரங்களை யூடியூப் மூலம் கற்றுக் கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்?

* இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

* யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது?

சிக்கிய கே.பி.அன்பழகன்; 57 இடங்களில் கட்டம் கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை!

* யூடியூபில் நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா?

* யூடியூப் - யை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகவும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகவும், கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனை எவ்வாறு தடுக்க போகிறோம்? அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், இந்த வழக்கில் கே.கே. ராமகிருஷ்ணன் என்பவரை நியமித்த நீதிபதி, யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

அடுத்த செய்தி