ஆப்நகரம்

மதுரையில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை- நிர்வாகி கைது!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் இயங்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில், 25-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். இங்குள்ள 4 சிறுமிகளை காப்பக நிர்வாகியே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Aug 2019, 12:40 pm
மதுரை அருகே செயல்பட்டு வரும் தனியார் காப்பகத்தில், 4 சிறுமிகளை அங்கு பணிபுரியும் ஊழியரே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil மதுரையில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை- நிர்வாகி கைது!
மதுரையில் தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை- நிர்வாகி கைது!


மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில், தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் (41) ஆகியோர் இந்த காப்பகத்தை நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், காப்பகத்திற்கு சென்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அங்கு தங்கியிருந்த சிறுவர், சிறுமிகளிடம் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

பள்ளித்தோழி மீது கொண்ட காதலால் கணவனே தனியே தவிக்கவிட்டு சென்ற பெண்!

காப்பக நிர்வாகியான ஆதிசிவன், சிறுமிகளை வலுக்கட்டாயமாக தனது அலுவலகத்தில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமிகளை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் என்ன செய்வதென்று தெரியாமல், தங்கள் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து குமறியது தெரியவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளும் உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற சிறுவர்-சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகம் நடத்த முயன்றவர் கைது!

மேலும் இந்த சம்பவம் குறித்து, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காப்பக நிர்வாகி ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் கொடூரன்களுக்கு அதிகபட்சம் தண்டனை வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே செயின் பறிப்பில் படுகாயமடைந்த பெண்!

அடுத்த செய்தி