ஆப்நகரம்

மதுரையில் பயங்கரம்; தனது மைனர் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது!

தன்னுடைய 17 வயது மகளுக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை, அப்பெண்ணின் தாய் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 2:58 pm
தென்காசியைச் சேர்ந்த மகேஸ்வரி, தனது 17 வயது மகளுடன் முருக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர் வீரமணி என்ற நபரை வேலைக்குச் சேர்த்துள்ளனர். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். இந்நிலையில் வீரமணிக்கு, அந்த 17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Baby


இது கர்ப்பத்தில் கொண்டு போய் விட்டுள்ளது. இதையடுத்து தனது வேலையை விட்டு வீரமணி விலகிக் கொண்டார். உடனே மருத்துவரை அணுகி, தனது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க மகேஸ்வரி முயற்சித்துள்ளார். ஆனால் கர்ப்பம் வளர்ந்துவிட்டதால், கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் மதுரையை அடுத்த செல்லூருக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளனர்.

அங்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் கடந்த மாதம் 26ஆம் தேதி, அவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் கலை கல்லூரிக்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து, பச்சிளம் குழந்தையின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தையின் தலையில் கீறல் இருந்ததை, பிரேத பரிசோதனையில் கண்டறிந்தோம். எனவே குழந்தை ஏற்கனவே இறந்து போனதால், மகேஸ்வரி அதை கால்வாயில் வீசியிருக்கக் கூடும்.

இல்லையெனில் குழந்தையைக் கொன்று வீசியிருக்கக் கூடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணை தீவிரமாக விசாரித்து வருகிறோம். மேலும் மாயமான வீரமணியை தேடி வருகிறோம். அவரைக் கைது செய்யும் போது, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறினர்.

அடுத்த செய்தி