ஆப்நகரம்

நாங்க என்ன சொம்பையா..? அப்போ 6 வருஷம் ஜெயில்லையே கட... நீதிமன்றம் குபீர் உத்தரவு

நாமக்கல் அருகே கோயிலில் கொள்ளையடித்துவிட்டு ஊர் மக்களை மிரட்டிய வாலிபர்கள் மூன்று பேருக்கு சிறை தண்டனை

Samayam Tamil 2 Apr 2021, 9:09 pm
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சோற்றுக்கால் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
Samayam Tamil video grab image


இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், கோவில் காவலாளியை தாக்கி அறையில் பூட்டி விட்டு, கோவிலின் பூட்டை உடைத்து அம்மனின் தாலி, கிரீடம், நகைகள் மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

அறையில் அடைக்கப்பட்ட காவலாளி தனது அலைபேசி மூலமாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பரமத்தி வேலூரில் தப்பிய கொள்ளைக்கும்பல், அங்குள்ள கீரம்பூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.


அப்போது, அவர்கள் மூவரையும் பொதுமக்கள் பிடித்து கை, கால்களை கட்டிப் போட்ட நிலையில், மதுரை பேச்சுவழக்கில் பொதுமக்களை மிரட்டியதால் தாராளமாக அவர்களுக்கு தர்ம அடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடம் அடிவாங்கி பொங்கிய இளைஞர்கள், காவல்துறை வரட்டும் எங்களை கைது செய்யட்டும், அதற்குப் பின்னர் எங்களை பற்றி தெரியும்.எங்களை அடித்து விட்டீர்கள் அல்லவா?, நாங்கள் வெளியே வந்ததும் இந்த ஊர் எப்படி பதறும் என்று பாருங்கள்.

ஏன்? எதற்கு? 10 மணிக்கும் மேலாக தொடரும் ஐடி ரெய்டு..!

மதுரையில் எத்தனை தலையை உருட்டி இருக்கிறோம், இப்ப கத்தி இல்லாமல் உள்ளதால் தப்பித்தீர்கள். இதையடுத்து, பொறுமையை இழந்த பொதுமக்கள், எங்க ஊருக்கு வந்து எங்களையே மிரட்டுகிறாயா? என்று கூறி அடித்து நொறுக்கினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், மூவரும் மதுரையை சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், இவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த புதன் கிழமை பரமத்தி வேலூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, கொள்ளை அடித்தது, காவலாளியை தாக்கியது உள்ளிட்ட குற்றத்திற்காக மூன்று பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டை விதித்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி