ஆப்நகரம்

ஆற்றுப்பாலம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம்... போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம்; காவல் துறையினர் விசாரணை.

Samayam Tamil 23 May 2022, 5:45 pm
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த ஆற்றுப் பாலம் பகுதியில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக முதுகுளத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் சென்று விசாரணை நடத்தினர்.
Samayam Tamil murder news


விசாரணையில் மதுரை புதூரை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் சரவணன் (43) என்பது தெரியவந்தது. இறந்த சரவணன் என்பவர் முதுகுளத்தூர் ராஜூக்கள் தெருவை சேர்ந்த பத்மபிரியா என்பவரை திருமணம் செய்து கடந்த 15 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறுவது தொடர்கதையாகி வந்துள்ளது. அவரது உறவினர்கள் இருவரையும் சமரசம் பேசி வாழ வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதுபோன்று சண்டையிட்டு எதுவும் சொல்லாமல் சென்றதையடுத்து, அவரது மனைவி பத்மபிரியா போலீசாரிடம் தெரிவித்தார்.

விருதுநகர் கொடூர பாலியல் வழக்கு: சிறுவர்கள் 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி பத்மபிரியா இறந்து கிடந்த உடலை பார்த்து அவரது கணவர் சரவணன் என்பது உறுதிப்படுத்தினார். மேலும், சரவணன் இறப்பதற்கு முன்பு ஆற்றுப்பாலம் டாஸ்மாக் கடை இருந்த காட்டுப் பகுதியில் மது அருந்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சரவணனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி