ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் வீட்டை இடித்த கிராம மக்கள்

குருவிக்காடு கிராம மக்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களுடன் சேர்ந்து வினுவின் வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடியுள்ளனர். வீட்டையும் இடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2019, 10:59 am
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் வீட்டை பொதுமக்களே இடித்துத்துள்ளனர்.
Samayam Tamil house_2


கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி குருவிக்காடு பகுதியை சேர்ந்தவர் வினு. இவர் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். அப்பகுதியில் வசித்து வந்த ஒரு பள்ளி மாணவியை இவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து வினுவை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே குருவிக்காடு கிராம மக்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்களுடன் சேர்ந்து வினுவின் வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடியுள்ளனர். வீட்டையும் இடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி