ஆப்நகரம்

மொய் பணத்தை ஆட்டைய போட்ட போலி உறவினர்..! ஆனா இப்படி ஏமாறக்கூடாது

சென்னையில் நடந்த திருமண விழாவில் உறவினரை போல கலந்துகொண்டு மொய் பணத்தை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 30 Oct 2020, 6:26 pm
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த பிந்து என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்து அவர்களது வரவேற்பு நிகழ்ச்சி கவரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது, மணமக்களை காண வந்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மொய் எழுதினர்.
Samayam Tamil மொய் பணம் மோசடி


அப்போது மொய் பணத்தை மணமக்களின் உறவினர் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில், மணமக்களின் நெருங்கிய உறவினரை போன்று மண்டபத்துக்கு வந்த மர்ம நபர் ஒருவர் , '' நான் இப்போதுதான் சாப்பிட்டு விட்டு வருகிறேன். சாப்பாடு தீர்ந்துவிட போகிறது, ஆகையால் நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் மொய் எழுதுவதை கவனித்து கொள்கிறேன் என கூறிவிட்டு அவரிடம் இருந்த மொய் பணத்தையும் கேட்டு பெற்றுள்ளார்.

சாப்பிட போன அந்த உறவினர் திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர் சுமார் 1 லட்சம் ரூபாய் மொய் பணத்துடன் அபேஸ் ஆனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியான மணமக்கள் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மண்டபத்துக்கு வந்த போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பேராசிரியர் மீது பிரேமம், கல்லூரி மாணவி பலாத்காரம்..! சென்னையில் பரபரப்பு

தமிழ் சினிமாவில் '' ஊரை தெரிஞ்சிகிட்டேன்'' என்ற படத்தில் பாண்டியராஜனும், செந்திலும் இதே பாணியில் உறவினர்களை போல நடித்து மொய் பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் மோசடி காட்சிகள் இடம்பெறும். அதுபோல நிஜத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் மண்டபத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா காலத்தில் இதுபோன்ற நூதன கொள்ளைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி