ஆப்நகரம்

தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை, மதுரையில் பகீர்

மதுரை அருகே மூதாட்டிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.

Samayam Tamil 8 Sep 2020, 8:18 pm
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் துணைக்கு யாருமின்றி தனிமையில் வசித்து வருகிறார். இதை கவனித்துக்கொண்டிருந்த கார்த்தி பாண்டி (37) என்பவர் மூதாட்டியை சில நாட்களாக சைட் அடித்து வந்துள்ளார்.
Samayam Tamil accused


இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம்போல வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை சந்திக்க சென்ற கார்த்தி பாண்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி சத்தம் போட்டதும், கார்த்தி பாண்டி அங்கிருந்து சென்றுள்ளார்.

அதையடுத்து, மறுநாள் காலையில் நடந்தவற்றை மூதாட்டி அக்கம்பக்கத்தில் எடுத்துக்கூறியுள்ளார். அவர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில், போலீசுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கார்த்தி பாண்டியை பிடித்து விசாரித்தனர்.

அலறும் குழந்தையின் உடலை மெழுகால் சுடும் பெண்கள், பதைபதைக்கும் வீடியோ

பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றவர்கள், வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளினர். 1 வயது குழந்தையென்றாலும், 70 வயது மூதாட்டி ஆனாலும் அனுபவிக்க துடிக்கும் காமகர்களினால் என்றும் ஆபத்து நேரும் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.

அடுத்த செய்தி