ஆப்நகரம்

பெண் துடிதுடிக்க கொலை... தேனியில் துணிகர சம்பவம்..! அதிர்ச்சி காரணம்

போடியில் வட்டி பணம் கேட்டு சண்டைபோட்ட பெண்ணை கட்டட தொழிலாளி கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 May 2022, 6:24 pm
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ளது வினோபாஜி காலனி. இங்கு தனியார் பள்ளி அருகில் உள்ள பனோரமா நகரில் வசித்து வருபவர் பவுன் தாய் (50). இவரது இரண்டு மகன்களும் இருவரும் வெளியூரில் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil theni woman murder case


கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதை தொழிலாக கொண்டுள்ளார். இதுபோல, போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு (30) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பவுன் தாயிடம் பிரபு அவசரத் தேவைக்காக 100 ரூபாய்க்கு 5 ரூபாய் வட்டி வீதம் ஒரு லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.

மாதம் 5 ஆயிரம் வட்டி தருவதாக கூறி பவுன் தாயிடம் ஒரு லட்சம் பெற்றுச் சென்ற இவர் இதுவரை வட்டி தொகை எதுவும் கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை பவுன் தாய் பிரபுவிற்கு போன் மூலமாகவும் நேரிலும் பணத்தையும், வட்டியையும் கேட்டபோது பிரபு சரிவர பதில் ஏதும் கூறவில்லை.

இந்த சூழலில், சம்பவம் நடந்த அன்று பவுன் தாய் பிரபுவின் வீட்டிற்கு வட்டியும் பணமும் கேட்டு சென்றுள்ளார். வீட்டில் பிரபு இல்லாததால் பிரபுவையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சத்தம் போட்டு வந்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பிரபு விஷயம் அறிந்து கோபத்துடன் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு இரவு சுமார் 8 மணி அளவில் பவுன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
அப்போது பிரபு பவுன் தாயை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளார்.

ரூம் முழுக்க ஆணுறை... ஆடி போயிட்டேன் சார்... சித்ரா விவகாரத்தில் பரபரப்பு..!

இதனால் பவுன் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் ரத்தக்கறையுடன் பிரபு வெளியே வந்துள்ளார். பவுன் தாய் வீட்டில் எழுந்த சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்த போது பிரபு வட்டி கொடுக்க வந்ததாக கூறியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் பிரபுவின் சட்டையில் உள்ள ரத்தக்கறையையும் கையிலுள்ள காயத்தையும் கண்டு சந்தேகப்பட்டு உடனடியாக போடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரது உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதற்கிடையே, கொலையாளி பிரபு தாமாகவே போடி நகர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.

போடி தாலுகா காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி