ஆப்நகரம்

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது; சைல்டு லைன் மூலம் நடவடிக்கை

சென்னையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2022, 6:33 pm
அண்ணாநகரில் வசித்து வந்த 15 வயது சிறுமியை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (23) என்பவர் காதலித்து கடந்த 13.12.2021 அன்று ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொளத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
Samayam Tamil pocso


இந்நிலையில், கவியரசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், சிறுமி வேலைக்கு செல்லுமாறு கூறி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன் சிறுமியை அடித்து துன்புறுத்தியதால் சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்து சிறுமி 01.05.2022 அன்று குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்ததின் பேரில் குழந்தைகள் நல அலுவலக உறுப்பினர் ஹேமாவதி இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில், போக்சோ மற்றும் குழந்தை திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

உடலுறவு... பல ஆண்களுடன் சல்லாபம்... மனைவியை அடித்தே கொன்ற கணவன்

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கவியரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி