ஆப்நகரம்

மனைவி விவாகரத்து, மகளை பலாத்காரம் செய்து வந்த தந்தை கைது..!

உபியில் தனது 5 வயது மகளை பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 29 Mar 2021, 5:46 pm
உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக சைல்டு உதவி மையத்துக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
Samayam Tamil file pic


அப்போது, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 5 வயது மகளுடன் அந்த நபர் வசித்து வந்த , கடந்த நிலையில் நீண்ட நாட்களாக சிறுமியை அவர் பலாத்காரம் செய்து வந்ததது தெரிய வந்தது. மேலும், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் தந்தை தன்னை பலாத்காரம் செய்த சம்பவத்தை தெரியப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட தந்தை போலீசுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து போக்ஸோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார் தப்பிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

'சைஸ் என்னனு கேட்டாரு', காஞ்சனா பட திருநங்கையின் பாலியல் குற்றசாட்டு..!

இந்தியாவில் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்ட பின்னர் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறும் குற்ற சம்பவங்கள் சாமானிய மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட தொடங்கினாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகித்தான் வருகின்றன.

அடுத்த செய்தி