ஆப்நகரம்

சிறுமி கர்ப்பம், தந்தை மீது போக்சோ.! விழுப்புரம் அதிர்ச்சி

விழுப்புரம் அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 23 Nov 2020, 6:01 pm
விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த 14 வயதான சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டு உடல்நலம் குன்றியுள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில் சிறுமியை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்ததில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தாய், கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கேட்டு விசாரித்தார்.

அப்போது, அப்பகுதியில் இருக்கும் வாலிபர் ஒருவர்தான் என சீரும் கூறியுள்ளார். அதனையடுத்து, சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், திருவெண்ணெய்நல்லூருக்கு வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், சந்தேகிக்கும்படி அங்கு யாரும் இல்லை.

ஆஸ்பத்திரியில் மகன் உயிரிழப்பு, தாய் வீட்டில் தற்கொலை..! சோகத்தில் குடும்பம்

இந்நிலையில், சிறுமியிடம் சந்தேகப்பட்ட போலீசார், அவரிடம் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, தனது கர்ப்பத்துக்கு தந்தைதான் காரணம் என கூறி போலீசாரை திக்குமுக்காட வைத்தார். பின்னர், சிறுமியின் தந்தையிடம் விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி