ஆப்நகரம்

சென்னையில் கணவருக்கு தெரியாமல் தனிமையில் ஒதுங்கும் பெண்களுக்கு வலை! பகீர் சம்பவம்

சென்னை அருகே தனிமையில் சந்தித்துக்கொண்ட காதலர்களிடம் போலீசை போல நடித்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 24 Sep 2020, 7:33 pm
சென்னை மணலி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் தனது செல்போனையும், பணத்தையும் ஒருவர் வழிப்பறி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து, தெளிவாக கேட்டறிய போலீசார் முயன்றபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, நடந்த உண்மையை மட்டும் கூறும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அப்போது, அப்பெண் விவரித்தவை போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Samayam Tamil married woman affairs


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனது பழைய காதலனுடன் அவர் பால்பண்ணை அருகே உள்ள மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உரையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர், போலீசை போன்று அவர்களை மிரட்டியுள்ளார்.

மேலும், திருமணமாகி வேறொரு நபருடன் ஊர் சுற்றுவதை உன் கணவனுக்கு தெரிவிக்கப்போவதாகூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார். அப்போது, இருவரையும் செல்போனில் படம் பிடித்துக்கொண்ட அந்த நபர், பெண்ணுடன் இந்த வாலிபரை அடித்து துரத்தியுள்ளார். இதையடுத்து, தனிமையில் சிக்கிக்கொண்ட பெண்ணை போட்டோவை வைத்து மிரட்டிய அந்த நபர், அந்த மறைவான இடத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதையடுத்து, பெண்ணின் கைப்பையில் இருந்த 15 ரூபாய் பணம் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். ஆனால், விஷயம் வெளியில் கசிந்தால் கணவனுக்கு தெரிந்து பிரச்சினை ஆகும் என்று பயந்த அப்பெண் பொய் புகார் அளித்துள்ளது தெரிய வந்தது.

அதிரவைக்கும் ஐபிஎல் 2020 சூதாட்டம்; தீவிர விசாரணையில் சைபர் கிரைம்!

பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், அந்த நபர் பிடுங்கி சென்ற செல்போன் எண்ணின் சிக்னலை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மணலி பகுதியில் போலீஸ் உடையுடன் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்தான் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு பணத்தை திருடிய டிக்கி மணி என்று தெரிந்தது. மேலும், அவர் இதுபோன்று தனிமையில் சிக்கிய 50 க்கும் மேற்பட்ட பெண்களை புகைப்படம் எடுத்து, போலீஸ் என்றுகூறி பலாத்காரம் செய்து கையில் இருக்கும் பணத்தை பிடுங்கி சென்றுள்ளார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக்கி மணியின் உண்மை பிச்சை மணி. இவர் வாட்டம் சாட்டமாக இருந்ததால், பலபேர் போலீஸ் என்று நினைத்துக்கொண்டு இவரது மிரட்டலுக்கு பயந்து வந்ததால், கணவனுக்கு தெரியாமல் வெளியே பதுங்கும் பெண்கள், காதலனுடன் வரும் பெண்களை குறி வைத்து பலாத்காரம் மற்றும் வழிப்பறி சம்பவத்திலும் ஈடுபட்டு வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி