ஆப்நகரம்

கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை!

சென்னை அம்பத்தூர் அடுத்த அயபாக்கத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ்(26). இவருக்கு ஆவடியை சேர்ந்த சத்தியப்பிரியா என்ற மாணவியுடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

Samayam Tamil 17 Jul 2019, 5:35 pm
சென்னை அம்பத்தூரில் சட்டக் கல்லூரி மாணவியை முகநூல் மூலம் காதலித்து ஏமாற்றிய வாலிபரை, மாணவியின் தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை!
கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை!


சென்னை அம்பத்தூர் அடுத்த அயபாக்கத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ்(26). இவர் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பழுது நீக்கம் கடை வைத்துள்ளார். இவருக்கு ஆவடியை சேர்ந்த சத்தியப்பிரியா என்ற சட்டக்கல்லூரி மாணவியுடன் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். மேலும் லாரன்ஸ் சத்தியப்பிரியாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்ததாகவும் தெரிகிறது.

திருமணம் செய்யாமல் கடந்த மூன்று மாதமாக ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில், லாரன்ஸ் சத்தியப்பிரியாவை திருமணம் செய்து மறுத்துள்ளார். மேலும் திருமணம் செய்ய வேண்டுமானால் வரதட்சணை கொடுக்க வேண்டும் என கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்தியப்பிரியா கடந்த மாதம், ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் லாரன்ஸை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அண்மையில் வெளிவந்த லாரன்ஸ், சத்தியபிரியாவிற்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக் போன்றவற்றில் கிண்டல் செய்து வீடியோ பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்தியபிரியா நேற்று லாரன்ஸை சந்தித்து கண்டித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சத்தியப்பிரியாவின் தந்தை சக்திவேல் இன்று லாரன்ஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதை அடுத்து, சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லாரன்ஸை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த லாரன்ஸை அருகிலிருந்தவர்கள் மீட்டு, கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி