ஆப்நகரம்

எதை ஊத்திக் கொடுத்தீங்க; இப்படி தள்ளாடுது- ஓங்கி அடித்ததில் ஒரு மனைவி பலி- மற்றொருவர் சீரியஸ்!

மதுப் பழக்கத்தை மறக்கச் செய்யும் முயற்சியில், கணவரிடம் அடி வாங்கி ஒரு மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 28 Aug 2019, 4:01 pm
திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ்(35) கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி, திலகவதி ஆகிய இரு மனைவிகள் இருக்கின்றனர். மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
Samayam Tamil Girl Murder


ரமேஷிற்கு அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது இரு மனைவிகளுக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து, மனைவிகளை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இரட்டிப்பு பணம் வழங்குவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.15 கோடி மோசடி!

இதனால் எப்படியாவது குடிப் பழக்கத்தை மறக்கச் செய்ய வேண்டும் என்று மனைவிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக குடியை மறக்க பயன்படுத்தப்படும் மாத்திரையை வாங்கி வந்தனர். இதை உணவில் கலந்து கொடுத்துள்ளனர்.

அதனை வாங்கி சாப்பிட்டதும், ரமேஷிற்கு மயக்கமாக இருந்துள்ளது. உடனே தனது மனைவிகளிடம் எதை ஊத்திக் கொடுத்தீர்கள்? இப்படி மயக்கமாக வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- நாமக்கல் அருகே அதிர்ச்சி!

அதற்கு அவர்கள் குடியை மறக்கத் தான் மாத்திரை வாங்கிக் கொடுத்தோம் எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் ரமேஷிற்கு கோபம் வந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து, இரு மனைவிகளையும் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்து இருவரும் வலியால் துடித்துள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து, முதல் மனைவி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை!

அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கொலை செய்த ரமேஷ், தானாக முன்வந்து, போலீசில் சரண் அடைந்துள்ளார்.

அடுத்த செய்தி