ஆப்நகரம்

திருப்பூரில் அமமுக நிர்வாகி உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு!

திருப்பூரில் அம்மா முன்னேற்ற கழக கட்சி நிர்வாகி உட்பட இருவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 12:44 pm
திருப்பூரில் அம்மா முன்னேற்ற கழக கட்சி நிர்வாகி உட்பட இருவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திருப்பூரில் அமமுக நிர்வாகி உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு!
திருப்பூரில் அமமுக நிர்வாகி உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு!


திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியாக உள்ளார். ரமேஷின் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்த சுரேஷ் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுரேஷ், பாரதிநகர் பகுதியில் கணேஷ் பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. கணேஷ்பாண்டியை கத்தியால் குத்தியது அவரது தம்பி சதீஷ்பாண்டிக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர், சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த ரமேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

பின்னர் அங்கிருந்த குடியிருப்பு பகுதியில் ஒளிந்து கொண்ட சதீஷ் பாண்டியை அப்பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த ரமேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சதீஷ் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணாமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி