ஆப்நகரம்

தாத்தாவுடன் வந்த பேத்தியை வழிமடக்கி தாக்கும் நபர்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

நாகர்கோவில் அருகே பேத்தியுடன் வந்த முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 10 Mar 2020, 4:42 pm
கன்னியாகுமாரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் ராஜாமணி (69) . இவரது மகன் ரமேஷுக்கு 3 வயதில் மிர்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் ராஜாமணி தனது பேத்தி மிர்த்திகாவை இருசக்கரவாகனத்தில் அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தார்.
Samayam Tamil தாத்தாவுடன் வந்த பேத்தியை வழிமடக்கி தாக்கும் நபர்


அப்போது அவருக்கு அருகே வடசேரியை சேர்ந்த நாகராஜன் என்பவரும் பைக்கில் சென்றார். இந்த நிலையில் ராஜாமணியை முன்னேறி செல்லவிடாமல் நாகராஜன் அவரது பைக்கால் வழிமடக்கி நிறுத்தினார்.

இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதியவர் தனது பேத்தியுடன் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் நாகராஜன் ராஜாமணியை தாக்கி கீழே தள்ளினார். இதனால் பைக்கில் அமர்ந்திருந்த பெண் குழந்தையும் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

கோவை: இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு...

இந்த சம்பவத்தை பார்த்ததும் அப்பகுதியில் இருந்த வாலிபர்கள் சிலர், இடிபாடுகளில் சிக்கிய குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தை குறித்து சிறுமியின் தந்தை ரமேஷ் லோக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவலர்கள் அலட்சியம் காட்டியதோடு புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் அவர் டிஜிபி அலுவலகத்துக்கு நேராக சென்று அதிகாரி ஜெ.கே. திரிபாதியிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அதன் பிறகு டிஜிபி அளித்த உத்தரவின் பேரில் திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் போலீசார் புகாரை பதிவு செய்தனர். இதையடுத்து வடசேரியை சேர்ந்த நாகராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி