ஆப்நகரம்

கரூர் பயங்கரம்: காதல் கணவன் கண்முன்னே வெட்டிக்கொலை..! தீராத வெறி

கரூர் அருகே இளநீர் கடையில் வியாபாரம் செய்து வந்தவரை மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 19 Sep 2020, 3:13 pm
கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தை அடுத்த சின்ன ஆண்டான்புரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் இளநீர் கடை நடந்து வருகிறார். இந்த நிலையில், குணசேகரன் இளநீர் கொள்முதல் செய்யவதற்காக பொள்ளாச்சி சென்றுள்ளார். அதனால், இளநீர் கடையில் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும், மனைவி ஷஸ்மிதாவும் வியாபாரம் செய்து வந்தனர். இந்த தம்பதி ஆறு மாதத்திற்கு முன்புதான் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
Samayam Tamil karur murder  spot


இந்நிலையில், குணசேகரன் நடத்தி வந்த இளநீர் கடைக்கு அருகே கிருஷ்ணமூர்த்தி ஜூஸ் கடை நடந்து வருகிறார். இன்று தந்தை இல்லாததால் இரு கடை வியாபாரத்தையும் புது தம்பதி இருவரும் நடத்தி வந்தனர். அப்போது அங்கு டூ வீலரில் வந்த இரண்டு பேர் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அதை கண்டு அலறி துடித்த ஷஷ்மிதாவின் குரலை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், அங்கு கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கரூர் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணையில் இறங்கினர். கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறிதான் ஷஷ்மிதாவை காதல் திருமணம் செய்துள்ளார். அதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்பகை இருந்துள்ளாதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ராசிக்கல் கல்பனாவுக்கே நேரம் சரியில்லை, வரதட்சணை வழக்கில் சிக்கி தவிக்கிறார்...

திருமணம் நடந்து 6 மாதங்களே ஆன நிலையில், கணவன் கண்ணெதிரே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி