ஆப்நகரம்

ஆபாச நாயகனின் வலைக்குள் சிக்கிய திருமணமான பெண்..! வியாசர்பாடியில் பரபரப்பு

மேட்ரிமோனி மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் கணவனை இழந்த பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Jun 2020, 8:16 pm
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சுந்தரி (மாற்று பெயர்). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். இந்நிலையில் சுந்தரி தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுந்தரி இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக பிரபல மேட்ரிமோனியை அணுகியபோது அவருக்கு வியாசர்பாடியைச் சேர்ந்த அஜ்மல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil அஜ்மல்


இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், அஜ்மலுடன் சுந்தரி திருமணம் செய்துகொள்ளாமல் நெருங்கி பழகி வந்துள்ளார். அஜ்மலின் வாழைப்பழம் போன்ற பேச்சில் மயங்கிய சுந்தரி 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களில் சுந்தரிக்கு அஜ்மல் நடவடிக்கையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தான் கொடுத்த பணம் மற்றும் நகையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அஜ்மல், சுந்தரியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை..! குமரி பெண் சோகம்...

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரி தந்து உறவினர்களுடன் அஜ்மல் வசிக்கும் இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அஜ்மலை அடித்து விளாசியுள்ளனர். பின்னர் அஜ்மல் பயன்படுத்திய செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் சுந்தரி மட்டுமல்லாமல் நிறைய பெண்களுடன் அவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அஜ்மலிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி