ஆப்நகரம்

கர்ப்பிணி மனைவியை சமைக்க சொல்லிவிட்டு, தூக்கில் தொங்கிய கணவன்..!

சென்னை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Sep 2020, 5:57 pm
சென்னை செங்குன்றத்தில் உள்ள சாய்பாபா அபார்ட்மெண்டின் பி பிளாக்கில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தினேஷ். இவருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் சரண்யா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
Samayam Tamil dinesh


இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் தரப்பிரிவில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த தினேஷுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதில் தோல்வியடைந்து பணத்தை இழந்து வந்த தினேஷ், ஒரு கட்டத்தில் தன்னிடத்தில் இருக்கும் பண பற்றாக்குறையினால் நண்பர்கள் வட்டாரத்தில் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார்.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதோடு, கடனும் பெருகியுள்ளது. இந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த தினேஷ் மனைவியிடம் பேசிவிட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை மூடியுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வெளியில் வராததால் சரண்யாவும், தினேஷின் தாயும் கதவை தட்டி பார்த்துவிட்டு பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அலிமா எந்த சந்தோஷத்தையும் பார்க்கல... புளியந்தோப்பு மின்கசிவில் இறந்தவரின் சோகம்

அப்போது, தினேஷ் மின்விசியில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் உதவியுடன் தினேஷை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சரண்யா சம்பவத்தை குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், கணவனின் உடலை நல்லடக்கம் செய்ய பிரேத பரிசோதனையை முடித்து கொடுக்கும்படி கூறியுள்ளார். சூதாட்டம் தடை செய்யப்பட்டதை போல ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் தடை செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது .

அடுத்த செய்தி