ஆப்நகரம்

ஏழை பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு கொரோனா.! ஸ்டேஷன் மூடல்

சேலம் அருகே இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தில் கைதாகியுள்ள நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

Samayam Tamil 29 May 2020, 6:21 pm
சேலம் மாவட்டம் சஞ்சீவராயன் பேட்டை அடுத்த தாதகப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் சிலரை குறி வைத்து, பணத்தாசையை தூண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் லோகநாதன்.
Samayam Tamil ஏழை பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு கொரோனா


இவரும், இவரது மனைவியும் கடந்த வெகு நாட்களாக பிரதீப், சிவா ஆகியோரின் உதவியுடன் வறுமையில் உள்ள பெண்கள், கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர்.

அதற்கு சம்மதிக்காத பெண்களை லோகநாதனின் மனைவியின் மூலமாக ஆபாசமாக படமெடுத்து மிரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களான பிரதீப், சிவா மூவரும் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்..! குறி எந்த பெண்களுக்கு?

பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் லோகநாதனுக்கு தொற்று இருப்பதை கண்டு போலீசார் அதிச்சியடைந்தனர். இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. மேலும், சம்மந்தப்பட்ட மகளிர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அடுத்த செய்தி