ஆப்நகரம்

இப்படியொரு கேவலமான தொடர்பா? கள்ளக் காதலியின் கையை துண்டாக்கி எறிந்த காதலன்!

தவறான உறவின் காரணமாக, கள்ளக் காதலியின் கையை காதலன் வெட்டி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Aug 2019, 10:26 am
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே சின்ன தொட்டிபாளையைம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா(30). இவர் கடந்த 29ஆம் தேதி, தனது வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார்.
Samayam Tamil Murder


அப்போது அவரது இடது கை துண்டாக்கப்பட்டு, ரத்தம் தெறித்து வெளியேறிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Also Read: மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற திருடன் மீது சரமாரி தாக்குதல்!

இந்த சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சுஜாதாவிற்கும், பிரபு என்ற நபருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி பிரபு உயிரிழந்துள்ளார். இதனால் ஆதரவற்று இருந்த சுஜாதா, பின்னர் கட்டிட வேலைகளுக்குச் சென்றுள்ளார்.

அப்போது காரமடையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுஜாதா வீட்டிற்கு தங்கராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வப்போது வீட்டு செலவுகளுக்கு அவரிடம் இருந்து சுஜாதா பணம் பெற்றுள்ளார்.

Also Read: நெல்லை முன்னாள் மேயர் கொலை- விசாரணை வளையத்துக்குள் சீனியம்மாள்!

இந்நிலையில் வேறொரு நபருடன் சுஜாதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்தும் செலவிற்கு பணம் பெற்று வந்துள்ளார். இதனையறிந்த தங்கராஜ் கோபம் அடைந்துள்ளார்.

இதையடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி சுஜாதா வீட்டிற்கு தங்கராஜ் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தை வெட்ட முயற்சித்துள்ளார்.

அதை தனது கையால் தடுத்ததால், இடது கை துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் கத்தியை போட்டுவிட்டு தங்கராஜ் தப்பி ஓடியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: வரைபடம் வழங்க ரூ. 5000 லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரி- மக்கள் போராட்டம்!

அடுத்த செய்தி