ஆப்நகரம்

பணத்தை பிடுங்கிய போலீஸ், கமிஷனர் அலுவலகம் முன்பு கையை அறுத்து வாலிபர் ரகளை

போலீசார், தன் பணத்தை பிடுங்கி வைத்த்துக்கொண்டதாக கூறி, சென்னை கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்து, கையை அறுத்துக்கொண்டு வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 1 Jul 2022, 5:41 pm
சென்னை, பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் ,வள்ளுவர் நகர், 13 வது தெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட் ராஜ் (29). இவரின் அண்ணன் ஜோதி பாசு, இவரை, அந்த பகுதியில், ராஜ் என்பவர் கத்தியால் வெட்டினாராம். இதனால், ஜோதி பாசு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Samayam Tamil crime scene


சிகிச்சையில் இருக்கும் அண்ணனை பார்க்க, நேற்று இரவு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு, ஆனஸ்ட் ராஜ் வந்தார். அப்போது, அவர் போதையில் , அங்கு கத்தி கூச்சலிட்டதாக தெரிகிறது. அவரின் அண்ணி பிரியா, மருத்துவமனையில், போதையில் கத்த கூடாது என்றார்.

சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்புக்கு இருந்த நான்கு போலீசார், ஆனஸ்ட் ராஜிடம் , சத்தம் போட கூடாது என மருத்துவமனையை விட்டு வெளியேற்றினர். இந்த நிலையில், இன்று காலை, வேப்பேரி கமிஷனர் அலுவலகத்துக்குள், அனஸ்ட் ராஜ் அத்து மீறி நுழைந்தார்.

திமுக பிரமுகரின் தலையில்லா உடல் அடக்கம்... மேளம், நடனம், ஆதங்கம்...

திடீரென அவர், கையை பிளேடால், பல இடங்களில் அறுத்துக்கொண்டார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர், ரத்தம் சொட்ட, ஸ்டான்லி மருத்துவமனையில், போலீசார், என் பணம் ரூ,15 ஆயிரத்தை பிடுங்கி விட்டனர். அந்த பணம் வேண்டும் என கூறினார், வேப்பேரி போலீசார், ஆனஸ்ட் ராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி