ஆப்நகரம்

கேபிள் ஒயரில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழிப்பு

சாலையில் மின்கம்பங்களில் இருந்த ஒயரில் இருசக்கர வாகனம் சிக்கி, அதில் நடந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 25 May 2019, 4:57 pm
சாலையில் மின்கம்பங்களில் இருந்த ஒயரில் இருசக்கர வாகனம் சிக்கி, அதில் நடந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கேபிள் ஒயரில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி மண்டை உடைந்து உயிரிழப்பு
கேபிள் ஒயரில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி மண்டை உடைந்து உயிரிழப்பு


சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் அனுமன் நகரை சார்ந்தவர் முகமது அலி ஜின்னா (31). சோழிங்கநல்லூரில் உள்ள டிப்பார் மென்ட் கடையில் இவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் வேளையை முடித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை அக்கரை அருகே முகமது அலி தனது இருசக்கர வாகனத்தில் வரும் போது சாலை தடுப்பில் சுற்ற பட்டு இருந்த ஒயரில் இருசக்கர வாகனத்தின் கைபிடி சிக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுத்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாகமாக உயிர்யிழந்தார்.

முகமது அலி உடலை கைபற்றி அடையாறு போக்குவரத்து போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மின்கம்பங்கள் தெரு விளக்குகள் சாலை தடுப்புகள் போன்ற வற்றில் அதிகமான அளவில் கேபிள் ஒயர்கள் மற்றும் தொலை தொடர்பு ஒயர்கள் சுற்ற பற்று உள்ளது இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் கண்டும் காணமல் உள்ளதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாற்றி உள்ளனர்.

அடுத்த செய்தி