ஆப்நகரம்

இப்படியும் மரணம்..? கணவனை சடலமாக பார்த்து கதறிய மனைவி...மனதை உலுக்கிய சம்பவம்

சேலம் அருகே காதணி விழாவுக்கு உறவினர்களை அழைக்கச் சென்றவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2022, 7:39 pm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (36). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆத்தூர் ஏஎம்சி காலனி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
Samayam Tamil salem train hit


இந்நிலையில், தனது குழந்தைகளின் காதணி விழா அழைப்பிதழை கொடுக்க ஆத்தூரில் உள்ள தனது மாமியார் மற்றும் உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சீனிவாசன் நேற்று வந்துள்ளார். இதனையடுத்து இன்று அதிகாலை லீ பஜார் பகுதியில் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்க ரயில்வே தண்டவாளத்தை சீனிவாசன் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த அதிவிரைவு ரயில் சீனிவாசன் மீது மோதியுள்ளது.

ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனின் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்தாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மலை பாதையில் தலைகுப்புற விழுந்த வாகனம்: 2 பெண்கள் பலி, 10க்கும் மேற்பட்டோர் காயம்

கணவனின் உடலை பார்த்து கதறி அழுத பத்மாவின் குமுறல் காண்போரை உலுக்கியது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலி தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி