ஆப்நகரம்

பூட்டிய வீட்டுக்குள் துர்நாற்றம்... மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தவர் மர்ம மரணம்

குமரி மாவட்டம் தாழக் குடியில் வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் இறந்து கிடந்ததால் பரபரப்பு

Samayam Tamil 28 Jan 2022, 9:34 pm
தாழக்குடி வீரநாராயண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் அவரது மனைவி நாகேஸ்வரி அப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஹரிஸ்பாபு 36 என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 7 வருட காலமாக கணவன் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தை மனைவியுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஹரிஷ்பாபு தாழக்குடியில் தாயுடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil crime news tamil


இந்நிலையில், ஹரீஷ்பாபுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தாய் நாகேஸ்வரி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில் நேற்று மாலை ஹரிஸ்பாபு இருந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனிடையே வீடானது உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டு இருந்த காரணத்தினால் கதவினை உடைத்து பார்த்தபோது வீட்டில் ஹரிஸ்பாபு எந்த வித ஆடையும் இன்றி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

'அறுத்துடுவேன்'... மது போதையில் படிக்கட்டில் ஏறி நின்று நடத்துனரை மிரட்டும் வாலிபர்

பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரிஷ்பாபு விஷமருந்தி இறந்தாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாரா என பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தாழக்குடியில் அழுகிய நிலையில் வாலிபர் இறந்து கிடந்தது அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி