ஆப்நகரம்

மகளிடம் அத்துமீறிய தந்தை... நேரில் பார்த்த தாய்... அதிர்ச்சி தரும் ராமநாதபுரம் பாலியல் வழக்கு

ராமநாதபுரம் அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

Samayam Tamil 26 Apr 2022, 3:43 pm
சகித்துக்கொள்ள முடியாத குற்றங்களில் ஒன்று, ஒரு தந்தை தனது மகளுக்கு கொடுக்கக்கூடிய பாலியல் தொல்லை. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலங்களில் ஏதோ ஒரு பகுதியில் நடந்ததாக அவ்வப்போது செய்திகள் வாயிலாக வரும். ஆனால், இன்று தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் சூழலில் தந்தையே மகளை பலாத்காரம் செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.
Samayam Tamil father arrested in pocso


அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 2021-ம் வருடம் முதல் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். மேலும், இதுதொடர்பாக, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 18.04.2021-ம் தேதி சிறுமியை அவரது தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தபோது, அவரது மனைவி பார்த்துள்ளார்.

இதுதொடர்பாக, அன்றைய தினமே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.

பிரேக் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபரீதம்; சென்னை ரயில் விபத்தில் தகவல்

இவ்வழக்கு தொடர்பாக, நேற்று இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் குற்றவாளி என தந்தையை நீதிபதி சுபத்ரா அறிவித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.1,00,000 அபராதம் மற்றும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 5 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அடுத்த செய்தி