தூத்துக்குடியில் அண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக, காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் காவல் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, நீதிமன்றத்துக்கு செல்வதற்காக சாலையை கடந்தார்.
பெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த சைக்கோ கொலையாளி கைது!
அப்போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென சிவகுமாரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சிவகுமார் நின்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு, தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் உயிரிழந்தார். சிவகுமாரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதுதொடர்பாக தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து, கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கும் சோகம்; நீங்காத சாதியம்- ஒதுக்கப்படும் தலித்கள்!
விசாரணையில், ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே நடந்த இந்த கொலைச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை: என்ன நடந்தது?
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கே.டி.சி.நகர் டார்லிங் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு, தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதில் ஆஜராவதற்காக சிவகுமார் பாளையங்கோட்டையில் இருந்து காரில் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் காவல் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, நீதிமன்றத்துக்கு செல்வதற்காக சாலையை கடந்தார்.
பெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த சைக்கோ கொலையாளி கைது!
அப்போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென சிவகுமாரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சிவகுமார் நின்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு, தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் உயிரிழந்தார். சிவகுமாரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதுதொடர்பாக தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து, கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கும் சோகம்; நீங்காத சாதியம்- ஒதுக்கப்படும் தலித்கள்!
விசாரணையில், ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆத்திபழத்தின் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் காவல்நிலையம் அருகே நடந்த இந்த கொலைச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை: என்ன நடந்தது?