ஆப்நகரம்

ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சினையில் தந்தையை கொன்ற மகன் கைது!

தேனி அருகே 2வது திருமணம் செய்த தந்தை, வீட்டை விட்டு வெளியேறி வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் சொத்து பறிபோய் விடும் என்ற பயத்தில் மகனே பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 14 Sep 2019, 12:53 pm
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சினையில் தந்தையை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.
Samayam Tamil ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சனையில் தந்தையை கொன்ற மகன் கைது!
ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சனையில் தந்தையை கொன்ற மகன் கைது!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையான்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவருக்கு முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் விவகாரத்து பெற்று 2வது திருமணம் செய்து கொண்டார். 2வது மனைவிக்கு முத்துப்பாண்டி (25), பூபாண்டி என்ற மகன்களும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குபேந்திரன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வைகை அணை அருகே ஆற்றின் கரையோரம் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அப்போது அங்கு குள்ளபுரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

வெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் குபேந்திரனின் ஒரு கால் அகற்றப்பட்டது. இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் படுத்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை அவரது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குபேரன் சடலமாக கிடந்தார்.

உடலை கைப்பற்றிய வைகை அணை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சரவண தேவேந்திரன், சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்சா, மனோகரன் குற்றபிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

சென்னையில் சைபர் குற்றங்கள் அதிகமாம்: 4 மணிக்கு அலர்ட்டா இருங்க!

போலீசாரின் விசாரணையில் சொத்திற்காக தந்தையை மகனே கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து உசிலம்பட்டி அருகே வாகைகுளம் பகுதியில் ஒளிந்திருந்த குபேந்திரனின் மூத்த மகன் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர்.

அதில்தனது தந்தை குபேந்திரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அவரை பலமுறை வீட்டிற்கு வருமாறு அழைத்தும் வரவில்லை. இதனால் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் பறிபோகிவிடும் என்ற பயத்தில் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

என்னா அடி; பாலியல் சீண்டலில் சிக்கிய நபரை கதற, கதற புரட்டி எடுக்கும் போலீஸ்!

வைகை அணையில் நடைபெற்ற கொலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார்.

அடுத்த செய்தி