ஆப்நகரம்

மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது!

குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 2 Jun 2019, 10:59 am
வேதாரண்யம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது!
மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது!


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம்-2, தெற்குகுத்தகை பகுதியைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம் (38), கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (25). இந்த தம்பதிக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பானுமதி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி வந்தாக கூறப்படுகிறது. இதனால் பானுவின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவன் செல்வவிநாயகம் மனைவியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த நபருடன் தொடர்ந்து பேசியதால் நேற்று இரவு, வழக்கம்போல் கணவன், மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வவிநாயகம், வீட்டுக்கு பின்பக்கத்தில் வைத்து பானுவின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பானு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வாய்மேடு போலீசார் பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக செல்வவினாயகத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

அடுத்த செய்தி