ஆப்நகரம்

சிறையில் கணவன், மனைவி கர்ப்பம்... காதலன் கையை வெட்டி மனைவிக்கு பரிசளித்த ரவுடி...

கிருஷ்ணகிரி அருகே மனைவி வேறொருவருடன் நெருக்கமாக பழகி வந்த விவகாரத்தில் கொலை செய்த ரவுடி கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jun 2020, 9:29 pm
கிருஷ்ணகிரி பாரதி நகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட கை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்ட வேளையில், திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று இருப்பதாகவும் தகவல் வந்தது.
Samayam Tamil கிருஷ்ணகிரி கொலை


அங்கு சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசாருக்கு, ஏற்கெனவே கண்டறிந்த கை இந்த சடலத்துடையது என மருத்துவ ஆய்வில் உறுதி செய்தனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்டவரை குறித்து விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணன் கோயிலைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்றும் அவருக்கு திருமணமாகி மனைவி இருப்பதும் தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, நாங்க ஏற்கெனவே பிரிந்து விட்டோம், அவருக்கு ராணிப்பேட்டையைச் சேர்ந்த தமிழரசனின் மனைவியுடன் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் ராணிப்பேட்டைக்கு சென்ற போலீசார் தமிழரசனையும், அவரது மனைவியையும் விசாரித்தனர். அப்போது அனைத்தும் அம்பலமானது. தமிழரசன் பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார். தற்போதும் அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொலை..! பிகு பண்ணியதால் பழிக்கு பழி...

இந்நிலையில், தமிழரசன் சிறைக்கு செல்லும் நேரத்தை பயன்படுத்திக்கொண்ட பாலசுப்ரமணி, தமிழரசனின் மனைவியுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் கணவன் எப்போதெல்லாம் சிறைக்கும் செல்வாரோ அப்போதெல்லாம் தமிழரசனின் மனைவியுடன் பாலசுப்பிரமணி இருந்து வந்துள்ளார்.

மேலும், தமிழரசன் சிறையில் இருக்கும்போது, அவரது மனைவி கர்ப்பமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு, பாலசுப்பிரமணி அடிக்கடி வீட்டுக்கு வந்துபோன விவகாரமும் தெரியவந்தது. இதனால் கோபமாகி சுப்ரமணியை கொலை செய்யவும், மனைவிக்கு பாடம் கற்பிக்கவும் திட்டமிட்ட தமிழரசன், சம்பவத்தன்று பாலசுப்ரமணிக்கு மது வாங்கி கொடுத்து போதையில் இருக்கும்போது கொலை செய்துள்ளார்.

பின்னர் வலது கையை துண்டித்து அதனை ஒரு பையில் எடுத்து சென்று மனைவியிடம் காட்டிய அவர், நீ யாரிடமெல்லாம் தொடர்பில் இருக்கிறாயோ, அவர்களுக்கெல்லாம் இந்த நிலைதான் என எச்சரித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீசார் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி