ஆப்நகரம்

கொரோனாவை விட மோசமான வியாதி..! தமிழகத்தில் மீண்டும் அரங்கேறியது...

திருவண்ணாமலை அருகே சாதி மாற்றி திருமணம் செய்துகொண்ட நபரை பெண்ணின் வீட்டார் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை சீர்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 1:33 pm
திருவண்ணாமலை மாவட்டம் மொரப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (26). இவர் சென்னை வாலாஜாபாத் அருகே கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாகர் அவருடைய கிராமத்தை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கயல்விழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil திருவண்ணாமலை அருகே சாதி மாற்றி திருமணம் செய்துகொண்ட நபர் ஆணவப் படுகொலை


இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் பெண்ணின் வீட்டில் அவர்களது காதலை ஏற்க மறுத்துவிட்டனர். எனினும் நம்பிக்கையை கைவிடாத சுதாகர் பலமுறை கயல்விழியின் பெற்றோரிடம் தங்களது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். முயற்சி பயனிலிக்காததால் நபிக்கையை இழந்த சுதாகர், கயல்விழியை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவரும் சென்னைக்கு சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்ததும், அவர்கள் சென்னையில் இருந்த காதல் தம்பதியினரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு பஞ்சாயத்தை கூட்டிய ஊர் காரர்கள் காதல் ஜோடியை பிரித்து தனித்தனியே அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். நமக்கு இதுதான் விதி என்று நினைத்துகொண்டு சுதாகர் மீதும் வேலைக்காக சென்னைக்கு வந்தடைந்தார். ஆனால் கொரோனா பரவுவதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலாகியதால் சுதாகர் வேலையிழந்து தனது கிராமத்துக்கு சென்றுள்ளார்.

கொரோனாவால் வெறிபிடித்த வாலிபர் கடித்ததில் மூதாட்டி பலி..! தேனியில் பரபரப்பு

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரித்து விட்டதுக்கு பிறகும் சாதியின் அகம்பாவத்தை விடாத கயல்விழியின் தந்தை மூர்த்தி, எப்படியாவது சுதாகரை தீர்த்து கட்ட காத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுதாகர் வருவதை அறிந்துகொண்ட அவர் தனது மச்சான் கதிரவனுடன் வந்து சுதாகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவரும் ஆத்திரம் தீர சுதாகரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். சம்பவம் அறிந்த ஆரணி போலீசார் மூர்த்தியையும், கதிரவனையும் கைது செய்துள்ளனர்.

ஏழை, பணக்காரன், சாதி என்ற எந்த பாகுபாட்டையும் பாராமல் தாக்கி வரும் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க; அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆணவக்கொலை மட்டும் அடங்காமல் இருப்பது தமிழகத்தில் தீரா துயரமாக இருந்து வருகிறது.

அடுத்த செய்தி