ஆப்நகரம்

அவரு வெளியில் போய்ட்டாரு, இப்ப வாங்க... பாடையில் ஏற்றிய பெண்ணாசை...

சேலம் அருகே வேறொருவர் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட நபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.

Samayam Tamil 5 Sep 2020, 3:29 pm
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் பார்த்திபன். தேனியை சேர்ந்த இவர் அந்த கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பணி முடிந்து தனது ரூமுக்கு சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்த மூன்று பேர் கத்தியால் தாக்கியுள்ளனர். மர்ம நபர்களின் திடீர் தாக்குதலால் பதறிய அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
Samayam Tamil file pic


ஆனால், விடாமல் துரத்திய அந்த கும்பல் பார்த்திபனின் உயிர் போகும்வரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. அதனை கண்ட சிலர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதையடுத்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில் தெரியவந்தது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் சரத்.

பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (23). இவர் அந்த பகுதியில் உள்ள சிறிய ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி சென்று வந்த பார்த்திபனுக்கும், பிரியங்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது . இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டு மணஉறவை மீறிய காதலையும் வளர்த்துக்கொண்டனர்.

பெயிண்டர் வேலைக்கு செல்லும் சரத் இரவு நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வருவதால், இடைப்பட்ட நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், பார்த்திபனுடன் தனது மனைவி செல்போனில் பேசி வருவதை தெரிந்துகொண்ட சரத், பிரியங்காவை கண்டித்துவிட்டு செல்போனை பிடுங்கிக்கொண்டார்.

செம்மர கடத்தல்: திரைப் படத்தை மிஞ்சும் காட்சிகள், ஒருவர் கைது!

இதனால், இரண்டு நாட்களாக காதலியுடன் பேச முடியாமல் தவித்து வந்த பார்த்திபன், சரத்தின் வீட்டுக்கே சென்று, '' உன் மனைவியை நான் காதலிக்கிறேன். அவரை என்னுடன் அனுப்பி வை'' என்று சத்தம் போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத், தனது மாமனாரிடம் நடந்ததை கூறியதையடுத்து, பார்த்திபனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி, சம்பவம் நடந்த அன்று பார்த்திபனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் பார்த்திபனையும், அவரது மாமனார் தங்கவேலுவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி