ஆப்நகரம்

மது போதையில் தெரிந்த மனைவி விவகாரம், நண்பரை கொன்று புதைத்த வாலிபர்!

ராணிப்பேட்டை அருகே நண்பரின் மது அருந்திவிட்டு அவரை கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார்.

Samayam Tamil 31 Aug 2020, 7:01 pm
ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு 36 வயது. சசிகுமாருக்கும் விண்ணம்பள்ளியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் நண்பர்களாக இருந்து வந்தனர். இருவரும் அப்பகுதியில் குடித்துவிட்டு கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லாரன்ஸை கொலை செய்து காட்டில் புதைத்துவிட்டதாக கிராம நிர்வாக அலுவலரிடம் சசிகுமார் சரணடைந்துள்ளார்.
Samayam Tamil file pic


அதையடுத்து சிப்காட் போலீசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் தான் எதற்ககாக நண்பரை கொலை செய்தேன் என்று சசிகுமார் அளித்த வாக்குமூலம், '' நானும், லாரன்சும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தோம். நான் அவரது வீட்டுக்கு செல்வேன், அவரும் என் வீட்டுக்கு வருவார்.

இந்நிலையில், எனது வீட்டிற்கு வந்த சென்ற லாரன்ஸுக்கும், எனது மனைவிக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் எனக்கு தெரியாமல் தனிமையில் இருந்து வந்தனர். இந்த விவகாரம் எனக்கு தெரிய வந்ததால், சம்பவம் நடந்த அன்று லாரன்ஸை குடிப்பதற்காக காட்டு பகுதிக்கு அழைத்து சென்றேன். அப்போது, எனது மனைவியுடன் அவருக்கு இருக்கும் பழக்கத்தை குறித்து கேட்டபோது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.

5 கணவர்கள் கெஞ்சியும் 6வது திருமணம்..! சினிமா பாணியில் சிறப்பு சம்பவம்...

அப்போது, நான் கையில் இருந்த பீர் பாட்டிலால் லாரன்ஸின் தலையில் அடித்தேன். பின்னர் உடைந்த பாட்டிலால் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன் எனவும் அங்கேயே லாரன்ஸை புதைத்துவிட்டேன் எனவும் கூறினார். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று லாரன்ஸின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சசிகுமாரை கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி