ஆப்நகரம்

மணல் கொள்ளை: போலீசுக்கு துப்பு கொடுத்தவர் வெட்டி கொலை... விருதுநகரில் கொடூரம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சாக்குப்பையில் மணல் அள்ளுவதை போலீசாருக்கு தகவல் கொடுத்த நபர் வெட்டிக்கொலை.

Samayam Tamil 10 Mar 2022, 3:37 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (35). இவர் வ. புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள பெரிய ஓடையில் தனது இருசக்கர வாகனத்தில் சாக்குப் பையில் மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
Samayam Tamil murder tamil nadu


இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மாரியப்பன் (52) தான் தன்னை பற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாக முருகன் சந்தேகமடைந்தார். இந்நிலையில், நேற்று மாலை அா்ச்சுனாபுரத்தில் உள்ள பழைய பள்ளிக்கூடம் அருகே மாரியப்பன் மற்றும் அவரது மருமகன் சிங்கராஜ் (26) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த முருகன், மாரியப்பனை தகாத வாா்த்தைகளால் பேசி கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு, தடுக்க வந்த சிங்கராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்று விட்டார்.


அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவா்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த மாரியப்பன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இருவரும் இந்த சாதியா..? அமைச்சரின் மகள் பயத்துக்கு இதுதான் காரணமா..?

இச்சம்பவம் குறித்து சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில் முருகன் மீது வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி