ஆப்நகரம்

மகள் காதல் திருமணம்... மருமகனின் தாயை வெட்டி கொலை செய்த தந்தை...

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் பையனின் அம்மாவை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை

Samayam Tamil 21 May 2022, 1:44 pm
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா (20) என்பவரை அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் (24) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil மாதிரி புகைப்படம் (திருமணம்)
மாதிரி புகைப்படம் (திருமணம்)


இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த சூழலில் பெண்ணின் தந்தை கண்ணாயிரம் ஆத்திரத்தில் வினித்தின் தாய் ராக்கு (53) என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து கமுதி டிஎஸ்பி மணிகண்டன், அபிராமம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெண்ணின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி என நினைத்து... சாலையோரம் உறங்கிய இளம்பெண்ணை குத்தி கொன்ற நபர்...

மகள் காதல் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் மருமகனின் தாயை வெட்டி கொலை செய்த மாமனாரின் செயல் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி