ஆப்நகரம்

தங்கையின் காதலனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த அண்ணன்!

திருச்சி பாலக்கரை பகுதியில் தனது தங்கையை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, அண்ணனே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 3:49 pm
திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கையின் காதலனை, அண்ணன் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil தங்கையின் காதலனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த அண்ணன்!
தங்கையின் காதலனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த அண்ணன்!


திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பெல்ஸ் கிரவுண்ட் பகுதி தெலுங்கு பிரமுனர் சமூகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டார். மகன் சத்யநாராயணன்(30) தனியார் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரி தனது மகன் சத்யநாராயணனுடன் தனிவீட்டில் வசித்து வந்தார்.

பாலக்கரை பசுமடம் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் சந்தியாகு. இவருக்கு ஹென்றி வினோத் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சத்திய நாராயணனுக்கும், கல்லூரி மாணவியான நிவேதாவும்(19) கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த நிவேதாவின் அண்ணன், பலமுறை சத்திய நாராயணனை திட்டி மிரட்டி உள்ளார். அதேபோல் நிவேதாவை காதலிப்பதை விட்டுவிடுமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹென்றி வினோத் நேற்று இரவு 10 மணி அளவில் தனது நண்பர்களுடன் சத்தியநாராயணன் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து கொண்டு பெல்ஸ்கிரவுண்ட் பகுதியில் மது அருந்தி உள்ளனர். பின்னர் மதுபோதையில் ஹென்றி வினோத் சத்தியநாராயணனிடம் தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு மிரட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஹென்றி தனது கையில் இருந்த பீர் பாட்டிலால் சத்திய நாராயணன் தலையில் அடித்துள்ளார். பின்பு வயிற்று பகுதியில் குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பி ஓடிவிட்டார்.

ரத்தவெள்ளத்தில் இருந்த சத்திய நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சத்திய நாராயணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாலக்கரை காவல் துறையினர் வினோத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதி இருட்டாக இருப்பதால் யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் இங்கு கஞ்சா மற்றும் மதுபோதையில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு பெண்கள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த 40 நிமிடமாக ஆம்புலன்சிற்கு போன் செய்தும் வரவில்லை. பின்பு மினி ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றோம். ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் அவர் உயிரிழந்து இருக்கமாட்டார் என வேதனையுடன் தெரிவித்தனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி