ஆப்நகரம்

அவருக்கு எதுமே தெரியாது, என்னை கொன்னுருக்கலாமே - தெலங்கானா ஆணவக்கொலை

தெலங்கானா அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததால் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 7:01 pm
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செரிலிங்கமப்பள்ளியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (28). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வழக்கம் போலவே இவர்கள் திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை.
Samayam Tamil telangana honour killing


இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தங்களது வாழ்வில் இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக சந்தாநகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது, இரு வீட்டாரையும் அழைத்த போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும், எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, காதல் தம்பதி கட்சிபோலியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவந்தியின் உறவினர்களும் சில நபர்களும் ஹேமந்த் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, உங்களுடைய திருமணத்தை குறித்து முக்கிய முடிவெடுக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறி அவர்களை தங்கள் வந்த காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

ஆனால், கார் அவந்தி வீட்டு வழி செல்லலாம் தவறான பாதையில் சென்றதையடுத்து, இருவரும் ஓடும் காரிலிருந்து எப்படியோ தப்பி குதித்துள்ளனர். ஆனால் பின்னால் வந்த மற்றொரு கும்பல் ஹேமந்தை பிடித்து காருக்குள் அடைத்து அங்கிருந்து புறப்பட்டது. சங்காரெட்டி புறவழிசாலையில் வைத்து ஹேமந்தை கொடூரமாக வெட்டி கொலை செய்த அந்த கும்பல் அவரது உடலை சாலையில் இருந்த பள்ளத்தில் வீசி விட்டு தப்பியது. இதற்கிடையில், கணவனை குறித்து சங்காரெட்டி காவல் நிலையத்தில் அவந்தி புகார் கொடுத்திருந்ததன் அடிப்படையில், கடத்தல்காரர்களின் செல்போன் எண்களை போலீசார் தொடர்புகொண்டனர்.

மயங்கிய கணவனை இறந்ததாக கருதி பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்..! சேலம் பரபரப்பு

ஆனால் அனைவரது செல்போன்களும் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் டவர் சிக்னலை கொண்டு டிராக் செய்ததில் அவர்கள் அப்பகுதியில் இருந்த மதுக்கடையில் இருப்பதை கண்டறிந்தனர். அவர்களை பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பின்னர், சம்பவ இடத்தில் இருந்த ஹேமந்த் உடலை கைப்பற்றி உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹேமந்த் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அவந்தியின் தந்தை லக்ஷ்மா, மாமா யுகேந்தர், தாய் உட்பட கூலிப்படையைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி