ஆப்நகரம்

13 வயசு உறவுக்கார சிறுமி; 6 மாசமா நரக வேதனை - காட்டிக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்!

பல மாதங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த உறவுக்கார நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Nov 2020, 2:15 pm
தெலங்கானா மாநிலம் மகபுபாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் குருவி மந்தல். இங்கு வசித்து வரும் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வீட்டிலேயே சிறுமி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் குருவி மந்தல் கிராமத்திலுள்ள வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் உறவுக்கார இளைஞர் (35) அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இவர் நன்கு தெரிந்தவர் என்பதால் பெற்றோர்களும் எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அந்த இளைஞர் விபரீதமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Samayam Tamil Minor Girl Rape


அதாவது சிறுமியை வற்புறுத்தி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இவ்வாறு ஆறு மாத காலம் சித்ரவதையுடன் சிறுமி கழித்திருக்கிறாள். இந்நிலையில் சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக சிறுமி கூறவே, உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது உறவுக்கார இளைஞர்களின் அக்கிரமங்களை கூறி அழுதுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கைது... லஞ்சப் பணத்தைக் கையில் வைத்திருந்தார்!

இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் நேவி மும்பையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சிறுமி 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து 4 மாதங்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி