ஆப்நகரம்

பேர் என்னவோ பாரதியார்... சிறுமியை பலாத்காரம் செய்து 30 ஆண்டுகள் சிறை..!

கரூர் அருகே தெலுங்கு பட்டியில் சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Samayam Tamil 21 Jan 2022, 5:45 pm
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பொருந்தலூரை சேர்ந்தவர் ராசு மகன் பாரதியார் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி அன்று அதே பகுதியில் 14 வயது சிறுமியை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil karur pocso case


இது தொடர்பாக அச்சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர் பிணையில் வெளியில் வந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதியார் ஆஜர்படுத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அதிமுக வார்டு பெண் உறுப்பினர்கள் கடத்தல்: சேலத்தில் பரபரப்பு

விசாரணையில் இளைஞருக்கு கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். இதனையடுத்து இளைஞரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி