ஆப்நகரம்

சொந்த அண்ணணின் பெண்குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் கைது!

தனது சொந்த அண்ணணின் பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 16 Feb 2019, 10:55 am
வேலூர் மாவட்டத்தில் தனது சொந்த அண்ணணின் பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil சொந்த அண்ணணின் பெண்குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் கைது!
சொந்த அண்ணணின் பெண்குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் கைது!


வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சுரேஷ்பாபு (30). இவர் தனது சொந்த அண்ணனின் இரண்டு பெண்குழந்தைகளை (7 மற்றும் 9 வயது) தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது குழந்தைகளின் தாய் கவிதாவுக்கு தெரியவர அதிர்ச்சியடைந்த அவர், வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேஷ்பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி