ஆப்நகரம்

பார்சலை திறந்தால் விஷப் பாம்பு; அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்த வாலிபர்- அடுத்து நடந்த பரபரப்பு!

வெளியூரில் இருந்து வந்த பார்சலை ஆர்வத்துடன் திறந்த பார்த்த இளைஞர், விஷப் பாம்புவை கண்டதும் அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்தார்.

Samayam Tamil 26 Aug 2019, 3:17 pm
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தற்போது ஒடிசாவில் உள்ள மயுர்பஞ்ச் பகுதியில் உள்ள ரைரங்பூரில் வசித்து வருகிறார். முத்துக்குமரனுக்கு சமீபத்தில் பார்சல் ஒன்று வந்துள்ளது.
Samayam Tamil Snake


இது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வந்து சேர்ந்துள்ளது. இதை வாங்கிக் கொண்டு, அதை ஆர்வத்துடன் முத்துக்குமரன் திறந்து பார்த்தார். அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன.

Also Read: சென்னையில் கைவரிசைக் காட்டிய ஈரானிய நாட்டு கொள்ளையர்கள் கைது!

அதை ஒவ்வொன்றாக வெளியே எடுத்துள்ளார். அடியில் இருந்து 4 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று திடீரென்று எழுந்து தலையை காட்டியுள்ளது. அது சீறியதைக் கண்டதும் முத்துக்குமரன் பேரதிர்ச்சி அடைந்தார்.

Also Read: காஞ்சிபுரம் கோயிலில் மர்மபொருள் வெடித்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், விஷப் பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

Also Read: வேதாரண்யம் அருகே இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்- அம்பேத்கர் சிலை உடைப்பு!

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பார்சல் அனுப்பிய நிறுவனம் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த செய்தி