ஆப்நகரம்

”ராம்-ராம்” சொல்லாத பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள் கைது

மதத்தின் பெயராலும், மாடுகளின் பெயராலும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பாஜக ஆட்சி காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு போட்டு மகிழ்கிறது அரசு

Samayam Tamil 7 Oct 2019, 12:09 pm
அல்வார்: “ராம்-ராம்” என சொல்லாத பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டு அவரது கணவரை தாக்கிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil attack


ஜெய் ஸ்ரீராம் எனும் முழக்கத்தை கூறாத மற்றும் மாடுகளின் பெயரால் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் பாஜக ஆட்சி காலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களை தடுக்க கோரியும், தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராமசந்திர குஹா, அனுராக் கஷ்யாப், மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.

மதுரை: பட்டப்பகலில் வெறிச்செயல், இளைஞர் படுகொலை!

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், ராமர் பெயரில் சிறுபான்மை தம்பதியினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மற்றுமொறு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஹரியானா செல்வதற்காக தங்களது குழந்தையுடன் பேருந்து நிலையம் வந்த சிறுபான்மை தம்பதியினர், அங்குள்ள ஹோட்டலில் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு மது போதையில் வந்த பரத்வாஜ் மற்றும் பாட்டியா எனும் இரண்டு இளைஞர்கள், ”ராம்-ராம்” என கூறுமாறு அந்த தம்பதியை நிர்பந்தித்ததுடன், சிறுபான்மை சமூகத்தை பற்றி இழிவாக பேசியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த கணவரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தனது கணவர் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இதனை தடுக்க முற்பட்ட போது, பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயற்சித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

14 ஆண்டுகளில் 6 உறவினர்கள் கொலை; அதிர்ச்சியூட்டும் மட்டன் சூப் மர்டர்- சிக்கிய பெண்!

இதனை கண்ட அப்பகுதி மக்கள், அத்துமீறலில் ஈடுபட்ட அந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி