ஆப்நகரம்

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

கொடைக்கானலில் வைத்து முதலமைச்சரை கொலை செய்யப் போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்த மர்மநபர் இவ்வாறு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 28 Apr 2019, 2:45 pm
கொடைக்கானலில் வைத்து முதலமைச்சரை கொலை செய்யப் போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil eps cm edappadi palanisamy


சென்னை காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்த மர்மநபர், முதலமைச்சரை கொடைக்கானல் வைத்து கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளான்.

உடனடியாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், சந்துருவைப் பிடித்து திண்டுக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து குடிபோதையில் பலரும் வதந்தி பரப்பி வருவதாகவும், இவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி