ஆப்நகரம்

ஜாமீனில் வெளிவந்தவர் பட்டப்பகலில் படுகொலை... திருவாரூரில் பரபரப்பு..!

குடவாசல் அருகே முன் விரோதம் காரணமாக குடவாசல் அருகே மணவாளநல்லூர் பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை.

Samayam Tamil 19 Jun 2022, 1:45 pm
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே மணவாளநல்லூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி பூங்கோதைை. இவர்களின் மகன் 29 வயதுடைய சந்தோஷ். இன்று காலை சந்தோஷ் அவரது நாயுடன் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்யப்பட்டவர்


அப்போது, வீட்டின் அருகிலேயே சந்தோஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன். மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி சந்தோஷ் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு முன் வேறொரு வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள சந்தோஷ் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சந்தோஷ் இன்று காலையில் மணவாளநல்லூர் கீழத் தெருவில் உள்ள அவரது வீட்டு அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் இண்டிகா காரில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதாக கூறும் நிலையில், சந்தோஷ் வீட்டருகே அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் மீது சந்தேகப்பட்டு அவர் வீட்டில் இல்லாத நிலையில். அவரின் தாயாரை எரவாஞ்சேரி காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்லை... வங்கி ஊழியர் தற்கொலை

கொலை செய்யப்பட்ட சந்தோஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து எரவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி