ஆப்நகரம்

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் சடலமாக மீட்பு!

வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களான நிலையில் வாலிபரின் உடல் சடலமாக மீட்பு!

Samayam Tamil 31 May 2019, 3:29 pm
லத்தேரி அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு மூன்று நாட்களான நிலையில் வாலிபரின் உடல் சடலமாக மீட்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் சடலமாக மீட்பு!
கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் சடலமாக மீட்பு!


வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ளது சிங்காரெட்டியூர் கிராமம். இங்கிருந்து மேல்வடுகன்குட்டை செல்லும் சாலையில் அருகே அமைந்துள்ள ஓடையில் இன்று காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் சடலமாக கிடந்தது.

இதைபார்த்த கிராமத்தினர் உடனடியாக காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வாலிபர் உடலை மீட்டு சோதனை செய்தபோது, மர்மநபர்கள் யாரோ வாலிபரை கடத்தி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து சடலத்தை போட்டு சென்றது தெரியவந்தது. இவர் கொலை செய்யப்பட்ட மூன்று நாட்களாயிருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். கொலையான வாலிபர் யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டு வருவதும் தொடர் கதையாகியுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியேவர பீதியடைந்து, வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

அடுத்த செய்தி